» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை விடுவிப்பு : தவெக ஆட்சியில் 2வது முறை!

திங்கள் 15, ஜூன் 2026 12:33:25 PM (IST)

தமிழகத்தில் முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின் இரண்டாவது முறையாக மகளிர் உரிமை தொகை  ரூ. 1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் 15ம் தேதி வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வந்தது. தற்போது, தமிழகத்தில் தவெக தலைமையில் புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் 15ம் தேதியான இன்று மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு குறித்து முதல்-அமைச்சர் விஜய் கடந்த மாதம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது. தவெக ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 வழங்கப்படும் என தேர்தலின்போது விஜய் வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன்படி, மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை கடந்த மாதம் 15-ந் தேதி வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு அவர்களின் வங்கி கணக்குகளில் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின் இரண்டாவது முறையாக மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory