» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருப்பூரில் விஜய் பிரசாரம்: வெயில் தாங்காமல் 7 பெண்கள் உட்பட 9 பேர் மயங்கி விழுந்தனர்!

செவ்வாய் 14, ஏப்ரல் 2026 5:31:42 PM (IST)



திருப்பூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது, வெயிலின் தாக்கம் காரணமாக அக்கட்சியின் வேட்பாளர் மற்றும் 7 பெண்கள் உட்பட 9 பேர் மயக்கமடைந்தனர்.

தவெக தலைவர் விஜய், இன்று (ஏப்ரல் 14) திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொண்டார். இதற்காகச் சேலம் 6 வழிச்சாலை வழியாகப் பிரசார வாகனத்தில் அவர் திருப்பூருக்கு வருகை தந்தார். பெருமாநல்லூர் பகுதியில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் காலை முதலே திரண்டிருந்தனர்.

திருப்பூர் பகுதியில் இன்று வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால், காத்திருந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.    கோவை சூலூர் தொகுதி வேட்பாளர் சுகுமார், கணியூர் சுங்கச்சாவடியில் விஜய்யை வரவேற்றபோது திடீரென மயங்கி விழுந்தார்.    இதேபோல், பிரசார களத்தில் காத்திருந்த 7 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 9 பேர் அடுத்தடுத்து மயங்கினர்.

மயக்கமடைந்தவர்களுக்கு அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் உடனடியாகத் தண்ணீர் தெளித்து முதலுதவி அளித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கடும் வெயில் காரணமாகப் பிரசாரத்திற்குப் பொது மக்கள் குழந்தைகளுடன் வர வேண்டாம் எனத் தவெக தலைமை ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. இருப்பினும், தடையையும் மீறிப் பெண்கள் பலர் குழந்தைகளுடன் வெயிலில் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




Thoothukudi Business Directory