» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சூறாவளிக் காற்று எச்சரிக்கை: விசைப்படகுகள் நாளை கடலுக்குச் செல்லத் தடை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 9:14:09 PM (IST)
தூத்துக்குடியில் கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் நாளை (18.08.2026) ஒரு நாள் மட்டும் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்பிடித்துறைமுக மேலாண்மை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:கடலில் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வரையிலும், அதிகபட்சமாக 65 கி.மீ. வரையிலும் வீசக்கூடும். இதன் காரணமாக, பாதுகாப்பு நடவடிக்கையாக நாளை (18/08/2026) ஒரு நாள் மட்டும் விசைப்படகுகள் தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அனைத்து விசைப்படகு உரிமையாளர்களும், மீனவர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக இளைஞர்களுக்கு 90% வேலைவாய்ப்பு வழங்க சட்டம்: மக்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 11:40:01 AM (IST)

தூத்துக்குடியில் கால்நடைகளுக்கான சிறப்பு முகாம் : ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்தார்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 11:22:06 AM (IST)

தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:14:17 AM (IST)

முதியவரிடம் ரூ.48 லட்சம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி : வாலிபர் கைது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:43:26 AM (IST)

விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயம் - தேடும் பணி தீவிரம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:37:37 AM (IST)

காரில் கஞ்சா கடத்திய சிறை வார்டன் உள்பட 2 பேர் கைது : 2கிலோ கஞ்சா, கார், ரூ.10 லட்சம் பறிமுதல்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:31:48 AM (IST)








