» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சூறாவளிக் காற்று எச்சரிக்கை: விசைப்படகுகள் நாளை கடலுக்குச் செல்லத் தடை!

திங்கள் 17, ஆகஸ்ட் 2026 9:14:09 PM (IST)

தூத்துக்குடியில் கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் நாளை (18.08.2026) ஒரு நாள் மட்டும் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்பிடித்துறைமுக மேலாண்மை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:கடலில் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வரையிலும், அதிகபட்சமாக 65 கி.மீ. வரையிலும் வீசக்கூடும்.  இதன் காரணமாக, பாதுகாப்பு நடவடிக்கையாக நாளை (18/08/2026) ஒரு நாள் மட்டும் விசைப்படகுகள் தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அனைத்து விசைப்படகு உரிமையாளர்களும், மீனவர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory