» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் உப்பாற்று ஓடையில் எலும்புக்கூடு மீட்பு — எஸ்பி சிவபிரசாத் நேரில் விசாரணை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 5:38:52 PM (IST)
தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி முத்தையாபுரம் பாதசாரிகள் பூங்கா அருகே உப்பாற்று ஓடை அமைந்துள்ளது. இன்று மாநகராட்சி சார்பில் ஜேசிபி வாகனம் மூலம் ஓடையில் உள்ள குப்பைக் கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. அப்போது, தேங்கியிருந்த நீர் குட்டையில் கழிவுகளை அள்ளிய போது, அதில் மனித எலும்புக்கூடு ஒன்று வெளிப்பட்டதைக் கண்டு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாகத் தகவல் அளிக்கப்பட்டதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் எலும்புக்கூட்டைக் கைப்பற்றினர். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு பார்வையிட்டார்.
மீட்கப்பட்ட சடலம் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் எனக் கூறப்படுகிறது. அவர் கொலை செய்யப்பட்டு உடல் இங்கு வீசப்பட்டதா, தற்கொலை செய்து கொண்டாரா அல்லது எதிர்பாராதவிதமாக ஓடையில் தவறி விழுந்து உயிரிழந்தாரா என்ற பல கோணங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக இளைஞர்களுக்கு 90% வேலைவாய்ப்பு வழங்க சட்டம்: மக்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 11:40:01 AM (IST)

தூத்துக்குடியில் கால்நடைகளுக்கான சிறப்பு முகாம் : ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்தார்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 11:22:06 AM (IST)

தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:14:17 AM (IST)

முதியவரிடம் ரூ.48 லட்சம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி : வாலிபர் கைது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:43:26 AM (IST)

விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயம் - தேடும் பணி தீவிரம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:37:37 AM (IST)

காரில் கஞ்சா கடத்திய சிறை வார்டன் உள்பட 2 பேர் கைது : 2கிலோ கஞ்சா, கார், ரூ.10 லட்சம் பறிமுதல்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:31:48 AM (IST)








