» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே கடலில் தவறி விழுந்த மீனவர் : 3 விசைப்படகுகளுடன் தேடும் பணி தீவிரம்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 4:28:01 PM (IST)
தூத்துக்குடி அருகே தருவைகுளம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த ஜான்சன் என்பவருக்குச் சொந்தமான செவுள் வலை விசைப்படகில், கடந்த 15.08.2026 அன்று இரவு 6 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.கரையில் இருந்து சுமார் 25 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, படகில் இருந்த முத்துப்பேட்டை இந்திரா நகரைச் சேர்ந்த முத்துக்குமார் (45) என்ற மீனவர் எதிர்பாராத விதமாகத் தவறி கடலில் விழுந்துள்ளார்.
ஆழ்கடலில் மாயமான மீனவர் முத்துக்குமாரைக் கண்டறியும் பொருட்டு, 3 விசைப்படகுகளில் சக மீனவர்கள் கடலுக்குச் சென்று அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மீனவ கிராம மக்களிடையே பெரும் கவலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக இளைஞர்களுக்கு 90% வேலைவாய்ப்பு வழங்க சட்டம்: மக்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 11:40:01 AM (IST)

தூத்துக்குடியில் கால்நடைகளுக்கான சிறப்பு முகாம் : ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்தார்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 11:22:06 AM (IST)

தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கம் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 10:14:17 AM (IST)

முதியவரிடம் ரூ.48 லட்சம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி : வாலிபர் கைது!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:43:26 AM (IST)

விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயம் - தேடும் பணி தீவிரம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:37:37 AM (IST)

காரில் கஞ்சா கடத்திய சிறை வார்டன் உள்பட 2 பேர் கைது : 2கிலோ கஞ்சா, கார், ரூ.10 லட்சம் பறிமுதல்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:31:48 AM (IST)








