» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 8:30:00 AM (IST)

தூத்துக்குடியில் விற்பனைக்காக 1.2 கிலோ கஞ்சா வைத்திருந்த இருவரை மத்திய பாகம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மத்திய பாகம் காவல் எல்லைக்குட்பட்ட தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த இருவரைப் பிடித்துச் சோதனை செய்தனர். சோதனையில், அவர்கள் விற்பனை செய்வதற்காக 1.200 கிலோ கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி நேதாஜி நகர் 2-வது தெரு சொர்ணபாண்டி மகன் சோலைகுமார் (32), அதே பகுதி 4வது தெருவைச் சேர்ந்த ராஜசிங் மகன் ஜெர்ரிஸ் (33) என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்த 1.2 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் மனநல பாதிப்பிலிருந்து மீண்ட டெல்லி வாலிபர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:10:40 PM (IST)

தவெக அரசின் பட்ஜெட் கானல் நீர் போன்றது: சட்டமன்றத்தில் மார்க்கண்டேயன் விமர்சனம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:18:42 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் ஸ்ரீ துர்க்கை அம்பிகைக்கு 55-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 4:12:51 PM (IST)

கலை விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:49:28 PM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் வியாபாரி தீக்குளித்து தற்கொலை முயற்சி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:31:17 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 3:23:03 PM (IST)








