» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 8:30:00 AM (IST)

தூத்துக்குடியில் விற்பனைக்காக 1.2 கிலோ கஞ்சா வைத்திருந்த இருவரை மத்திய பாகம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மத்திய பாகம் காவல் எல்லைக்குட்பட்ட தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த இருவரைப் பிடித்துச் சோதனை செய்தனர். சோதனையில், அவர்கள் விற்பனை செய்வதற்காக 1.200 கிலோ கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி நேதாஜி நகர் 2-வது தெரு சொர்ணபாண்டி மகன் சோலைகுமார் (32), அதே பகுதி 4வது தெருவைச் சேர்ந்த ராஜசிங் மகன் ஜெர்ரிஸ் (33) என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்த 1.2 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதல்வர் விஜய்யின் ஆட்சியைக் கவிழ்க்கப் பெரும் சதி: கோவில்பட்டியில் வைகோ குற்றச்சாட்டு
புதன் 26, ஆகஸ்ட் 2026 8:31:19 PM (IST)

தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: 1,190 மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது!
புதன் 26, ஆகஸ்ட் 2026 8:17:02 PM (IST)

பாட்டக்கரை பத்திரக்காளி அம்மன் கோயிலில் 2008 திருவிளக்கு பூஜை
புதன் 26, ஆகஸ்ட் 2026 5:33:52 PM (IST)

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்: ராஜா முத்துபாண்டிக்கு நடிகை சிம்ரன் நேரில் வாழ்த்து!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:51:01 PM (IST)

பிரஸ் கிளப் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் : பத்திரிகையாளர்கள் திரளாகப் பங்கேற்பு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:22:32 PM (IST)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் தொடக்கம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:15:46 PM (IST)








