» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: 1,190 மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது!

புதன் 26, ஆகஸ்ட் 2026 8:17:02 PM (IST)

Madhubottles.jpg

தூத்துக்குடி கால்டுவெல் காலனி பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபரை தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 1,190 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கால்டுவெல் காலனி பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை நடைபெறுவதாகக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது சட்டவிரோதமாக மதுபானங்களை வைத்து விற்பனை செய்த, தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் ஜான் பாண்டியன் (58) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜான் பாண்டியனிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1,190 மதுபாட்டில்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்து, மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory