» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 1 லட்சம் புகையிலை கார் பறிமுதல்: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 2பேர் கைது

புதன் 5, ஆகஸ்ட் 2026 2:09:26 PM (IST)



தூத்துக்குடியில் கடத்திவரப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை மற்றும் காரை பறிமுதல் செய்து அதில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சந்தேகத்தின் பேரில் வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தனர் சோதனையில் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை கூல்பேட் உள்பட பண்டில் பண்டலாக இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதில் மொத்தம் 150 கிலோ 250 கிராம் புகையிலை பொருட்கள் இருந்தது இத மதிப்பு ஒரு லட்சத்து 11,500 இவற்றை காருடன் பறிமுதல் செய்து அதில் இருந்த இரண்டு பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர் விசாரணையில் ராஜஸ்தான் மாநிலம் காளி பல்காரா பகுதியை சேர்ந்த அட்மன் ராம் மகன் வீரேந்திர பிஸ்னெய் (24) பாரத்சிங் மகன் பிரேம் சிங் (21) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory