» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் பலி!

புதன் 5, ஆகஸ்ட் 2026 11:37:18 AM (IST)

தூத்துக்குடியில் அள‌வுக்கு அதிகமாக மதுகுடித்தவர் உறங்கிய நிலையிலேயே இறந்தார்.

தூத்துக்குடி இனிகோ நகரில் வசிப்பவர் ராஜேந்திரன். இவரது மகன் குணா (34). இவர் கடல் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஸ்டெபி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா என்பதால் நேற்று இரவு அளவுக்கு அதிகமாக மதுபானம் குடித்ததாக தெரிகிறது. இரவு வீட்டுக்கு வந்து படுத்து உறங்கியவர் காலையில் இறந்த நிலையில் இருந்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்பாதம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads









Thoothukudi Business Directory