» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் பலி!
புதன் 5, ஆகஸ்ட் 2026 11:37:18 AM (IST)
தூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக மதுகுடித்தவர் உறங்கிய நிலையிலேயே இறந்தார்.
தூத்துக்குடி இனிகோ நகரில் வசிப்பவர் ராஜேந்திரன். இவரது மகன் குணா (34). இவர் கடல் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஸ்டெபி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா என்பதால் நேற்று இரவு அளவுக்கு அதிகமாக மதுபானம் குடித்ததாக தெரிகிறது. இரவு வீட்டுக்கு வந்து படுத்து உறங்கியவர் காலையில் இறந்த நிலையில் இருந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்பாதம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதல்வர் விஜய்யின் ஆட்சியைக் கவிழ்க்கப் பெரும் சதி: கோவில்பட்டியில் வைகோ குற்றச்சாட்டு
புதன் 26, ஆகஸ்ட் 2026 8:31:19 PM (IST)

தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: 1,190 மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது!
புதன் 26, ஆகஸ்ட் 2026 8:17:02 PM (IST)

பாட்டக்கரை பத்திரக்காளி அம்மன் கோயிலில் 2008 திருவிளக்கு பூஜை
புதன் 26, ஆகஸ்ட் 2026 5:33:52 PM (IST)

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்: ராஜா முத்துபாண்டிக்கு நடிகை சிம்ரன் நேரில் வாழ்த்து!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:51:01 PM (IST)

பிரஸ் கிளப் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் : பத்திரிகையாளர்கள் திரளாகப் பங்கேற்பு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:22:32 PM (IST)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் தொடக்கம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:15:46 PM (IST)








