» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் புதிய இணை ஆணையராக அருணாசலம் பொறுப்பேற்பு!

சனி 6, ஜூன் 2026 8:38:54 AM (IST)

அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் புதிய இணை ஆணையராக அருணாசலம் பொறுப்பேற்றுக்கொண்டார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அண்மையில் எழுந்த சில நிர்வாக ரீதியிலான புகார்களைத் தொடர்ந்து, கோவில் இணை ஆணையர் உட்பட 2 அதிகாரிகள் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

அதன்படி, திருச்செந்தூர் கோவிலில் இணை ஆணையராகப் பணியாற்றி வந்த ராமு, சென்னை திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் இணை ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் இணை ஆணையராகப் பணியாற்றி வந்த அருணாசலம் திருச்செந்தூர் கோவிலின் புதிய இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று மாலையில் திருச்செந்தூர் கோவில் அலுவலகத்தில் புதிய இணை ஆணையராக அருணாசலம் தனது பணிகளைத் தொடங்கினார். அவரிடம், இடமாறுதலாகிச் செல்லும் ராமு கோவில் நிர்வாகப் பொறுப்புகளை முறைப்படி ஒப்படைத்தார்.

இந்நிகழ்வில், கோவிலின் முதுநிலை கணக்கு அலுவலர் ராஜாராமன், அலுவலகக் கண்காணிப்பாளர் ரோகிணி, கண்காணிப்பாளர்கள் விவேக், அற்புதமணி மற்றும் கோவில் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டு புதிய இணை ஆணையருக்குத் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory