» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனு அளித்த 24 மணி நேரத்தில் 6 பேருக்கு பட்டா விநியோகம்: ஆட்சியர் விஷு மகாஜன் அதிரடி

புதன் 3, ஜூன் 2026 4:22:18 PM (IST)



ஏரல் ஜமாபந்தி முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் நிலப் பட்டா வேண்டி விண்ணப்பித்திருந்த தகுதிவாய்ந்த 6 பயனாளிகளுக்கு, 24 மணி நேரத்திற்குள் புதிய பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 1435-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயக் கணக்குகள் முடிவு செய்யும் பணி (ஜமாபந்தி) நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஜமாபந்தி முகாமில் வருவாய் தீர்வாய அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் நேரில் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

நேற்று (ஜூன் 2) தொடங்கிய முதலாம் நாள் ஜமாபந்தி முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் நிலப் பட்டா வேண்டி விண்ணப்பித்திருந்த தகுதிவாய்ந்த 6 பயனாளிகளுக்கு, 24 மணி நேரத்திற்குள் உடனடித் தீர்வாகப் புதிய பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று வழங்கிப் பாராட்டினார்.

நடப்பு நிதியாண்டிற்கான ஜமாபந்தி முகாம்கள் ஜூன் 12-ஆம் தேதி வரை தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் அந்தந்த வருவாய் தீர்வாய அலுவலர்கள் தலைமையில் நடைபெற உள்ளன. இன்று ஏரல் வட்டத்தில், ஆறுமுகமங்கலம் உள்வட்டத்திற்குட்பட்ட மாரமங்கலம், அகரம், மஞ்சள்நீர்க்காயல், பழையகாயல், முக்காணி, ராஜபதி மற்றும் புறையூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மனுக்கள் அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இன்றைய தினம் நடைபெற்ற முகாமில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 44 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. நேற்று நடைபெற்ற முதலாம் நாள் முகாமில் 75 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஏரல் வட்டத்தில் மொத்தம் 119 மனுக்களை மாவட்ட ஆட்சியர் நேரடியாகப் பெற்றுக்கொண்டு, மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் தீர ஆராய்ந்து, அவற்றின் மீது மிக விரைவாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

முன்னதாக, ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள நில அளவைப் பிரிவின் தற்போதைய செயல்பாடுகள், நில வரைபட ஆவணங்களின் பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுடன் விரிவாகக் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் அலுவலக மேலாளர் (பொது) ரகு, ஏரல் வட்டாட்சியர் செல்வகுமார், நில அளவைத் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையின் அனைத்து நிலை அலுவலர்களும் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory