» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற மூதாட்டி நீரில் மூழ்கி உயிரிழப்பு!
புதன் 3, ஜூன் 2026 11:51:43 AM (IST)
முறப்பநாடு அருகே தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற மூதாட்டி ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அடுத்த அகரம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாடத்தி (66). இவர் 100 நாள் வேலைத் திட்டப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மாடத்தி தனது மகள் பேச்சியம்மாள் மற்றும் மகன் அண்ணாமலை ஆகியோரது வீடுகளில் மாறி மாறித் தங்கி வாழ்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
நேற்று வழக்கம்போல் 100 நாள் வேலையை முடித்துவிட்டு, மாலை 06.00 மணியளவில் வீட்டில் இருந்து குளிப்பதற்காகத் தாமிரபரணி ஆற்றிற்குச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், அவர் வழக்கம்போலத் தனது மகள் அல்லது மகன் வீட்டில் தங்கியிருக்கலாம் என உறவினர்கள் நினைத்ததால், நேற்று இரவு அவரை யாரும் தேடவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை மாடத்தி 100 நாள் வேலைக்குச் செல்லவில்லை என்று தெரியவந்ததை அடுத்து, உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பல்வேறு இடங்களில் விசாரித்துத் தேடினர். அப்போது, தாமிரபரணி ஆற்றங்கரையில் மாடத்தி இறந்து கிடப்பது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக முறப்பநாடு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முறப்பநாடு காவல் ஆய்வாளர், உயிரிழந்த மாடத்தியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் குறித்து முறப்பநாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஹரிகரன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது: 2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள், பைக் பறிமுதல்!
புதன் 10, ஜூன் 2026 9:16:40 PM (IST)

சாலை விபத்தில் அரிசிக்கடை உரிமையாளர் பலி!
புதன் 10, ஜூன் 2026 8:20:13 PM (IST)

முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
புதன் 10, ஜூன் 2026 4:53:29 PM (IST)

ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 3பேர் கைது!
புதன் 10, ஜூன் 2026 4:48:08 PM (IST)

கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
புதன் 10, ஜூன் 2026 4:32:10 PM (IST)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்!
புதன் 10, ஜூன் 2026 4:02:44 PM (IST)









