» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோயில் வளாகத்தில் ஒருவருக்கு கத்திகுத்து: வாலிபர் கைது!
புதன் 3, ஜூன் 2026 8:28:46 AM (IST)
கடம்பூர் பகுதியில் கோயில் வளாகத்தில் தகராறு செய்ததை தடுத்த நபரை கத்தியால் குத்தி, கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பரும்புக்கோட்டை சுடலைமாட சுவாமி கோயில் அருகே வசிப்பவர் மோகன்குமார் மகன் சுரேஷ்குமார் (45), தொழிலாளி. கடந்த திங்கள்கிழமை இரவு, கடம்பூர் கார்வி சாலையைச் சேர்ந்த முத்துசாமி மகன் மாணிக்கராஜ் (31) என்பவர் அப்பகுதியில் உள்ள சுடலைமாட சுவாமி கோயிலுக்குச் சென்றுள்ளார்.
அங்கு கோயிலின் பொறுப்பாளரான செல்லத்துரை என்பவரிடம் மாணிக்கராஜ் வீண் தகராறில் ஈடுபட்டாராம். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளி சுரேஷ்குமார், மாணிக்கராஜை உடனே கண்டித்துத் தகராறைக் கைவிடுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணிக்கராஜ், சுரேஷ்குமாரை மிக அவதூறான வார்த்தைகளால் பேசி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்துள்ளார்.
அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சத்தமிட்டுக் கண்டித்ததைத் தொடர்ந்து, மாணிக்கராஜ் அங்கிருந்தவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தபடி சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சுரேஷ்குமாரை மீட்ட அப்பகுதியினர், சிகிச்சைக்காகப் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்துப் புகாரின் அடிப்படையில், கடம்பூர் காவல் நிலைய போலீசார் கொலை முயற்சி, அவதூறாகப் பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த மாணிக்கராஜை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது: 2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள், பைக் பறிமுதல்!
புதன் 10, ஜூன் 2026 9:16:40 PM (IST)

சாலை விபத்தில் அரிசிக்கடை உரிமையாளர் பலி!
புதன் 10, ஜூன் 2026 8:20:13 PM (IST)

முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
புதன் 10, ஜூன் 2026 4:53:29 PM (IST)

ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 3பேர் கைது!
புதன் 10, ஜூன் 2026 4:48:08 PM (IST)

கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
புதன் 10, ஜூன் 2026 4:32:10 PM (IST)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்!
புதன் 10, ஜூன் 2026 4:02:44 PM (IST)









