» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தனிக்கட்சித் தொடங்க அண்ணாமலை திட்டம்? ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்களால் சலசலப்பு!
செவ்வாய் 2, ஜூன் 2026 8:20:42 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அவரது பிறந்தநாளையொட்டி போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
முன்னாள் எஸ்பி அதிகாரியான அண்ணாமலை, கடந்த 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். பின்னர் அக்கட்சியின் மாநிலத் தலைவராக உயர்ந்த அவர், சமீபத்திய தேர்தலுக்கு முன்பு பதவியிலிருந்து மாற்றப்பட்டார். அதன் தொடர்ச்சியாக நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக கடுமையான தோல்வியைச் சந்தித்தது. தலைவராக அண்ணாமலை இருந்தபோது நாடாளுமன்றத் தேர்தலில் 11 சதவீதமாக இருந்த கட்சியின் வாக்கு வங்கி, தற்போது 2 சதவீதமாகக் குறைந்துள்ளதை அவரது ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கல்விக் கொள்கையை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்தும் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக அண்ணாமலை அண்மையில் அறிக்கை வெளியிட்டார். மத்திய அரசின் திட்டங்களை எப்போதும் ஆதரித்து வந்த அவர், முதன்முறையாக எதிர்ப்புக் குரல் எழுப்பியது தனிக்கட்சித் தொடக்கத்திற்கான அறிகுறி என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
நேற்று மாலை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த அண்ணாமலையின் காரில் பாஜக கட்சியின் கொடி கட்டப்படவில்லை. இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "ஓரிரு நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள், எல்லாவற்றையும் சொல்கிறேன்; இரண்டு நாட்கள் கழித்து அமர்ந்து பேசுவோம்" என்று கூறிவிட்டுச் சென்றார்.
டெல்லி சென்றுள்ள அவர், பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினைச் சந்தித்துப் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு, ஜூன் 4ஆம் தேதி தனது பிறந்தநாளன்று புதிய கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே கோவை, மதுரை, திருப்பூர், நாமக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அவரது பிறந்தநாளையொட்டி போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் "துரோகிகளை வென்றெடுக்க 2.0 அவதாரம் எடுக்கும் தலைவருக்கு வாழ்த்துகள்" எனவும், ராஜபாளையத்தில் நடைபெற்ற நற்பணி மன்றக் கூட்டத்தில் "அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும்" எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது தமிழக அரசியலிலும், பாஜக வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது: 2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள், பைக் பறிமுதல்!
புதன் 10, ஜூன் 2026 9:16:40 PM (IST)

சாலை விபத்தில் அரிசிக்கடை உரிமையாளர் பலி!
புதன் 10, ஜூன் 2026 8:20:13 PM (IST)

முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
புதன் 10, ஜூன் 2026 4:53:29 PM (IST)

ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 3பேர் கைது!
புதன் 10, ஜூன் 2026 4:48:08 PM (IST)

கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
புதன் 10, ஜூன் 2026 4:32:10 PM (IST)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்!
புதன் 10, ஜூன் 2026 4:02:44 PM (IST)










BabuJun 2, 2026 - 10:18:07 AM | Posted IP 162.1*****