» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: தவெக நிர்வாகிகள் இருவர் கைது
செவ்வாய் 2, ஜூன் 2026 8:08:51 AM (IST)
இளம்பெண்ணுக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் 2 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (29). இவர் த.வெ.க. மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராகப் பொறுப்பில் உள்ளார். இவருடைய நண்பர் இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் (27), இவரும் த.வெ.க. நிர்வாகியாக உள்ளார்.
இவர்கள் இருவரும் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 33 வயது இளம்பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காரில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், அந்த இளம்பெண்ணை இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க வைத்துள்ளனர்.
அப்போது அந்த இளம்பெண்ணுக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, இருவரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மயக்கம் தெளிந்த பின்னர் தனக்கு நேர்ந்த கொடூரத்தை அறிந்து அந்த இளம்பெண் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அங்கிருந்து தப்பி வந்த அவர், இது குறித்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இளம்பெண்ணின் புகாரின் பேரில், பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த த.வெ.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது: 2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள், பைக் பறிமுதல்!
புதன் 10, ஜூன் 2026 9:16:40 PM (IST)

சாலை விபத்தில் அரிசிக்கடை உரிமையாளர் பலி!
புதன் 10, ஜூன் 2026 8:20:13 PM (IST)

முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
புதன் 10, ஜூன் 2026 4:53:29 PM (IST)

ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 3பேர் கைது!
புதன் 10, ஜூன் 2026 4:48:08 PM (IST)

கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
புதன் 10, ஜூன் 2026 4:32:10 PM (IST)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்!
புதன் 10, ஜூன் 2026 4:02:44 PM (IST)









