» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: 368 மனுக்கள் பெற்றார் ஆட்சியர் விஷு மகாஜன்!
திங்கள் 1, ஜூன் 2026 8:33:13 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய நூற்றுக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டன. இன்றைய கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா வழங்குதல் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி மனுக்களை அளித்தனர்.
மேலும், தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, புதிய வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தேவைகள் அடங்கிய மொத்தம் 368 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்டன. இந்த மனுக்களைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சித் தலைவர், அவற்றின் மீது காலம் தாழ்த்தாமல் உரியத் துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அரசு அலுவலர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தினார்.
முன்னதாக, கூட்டரங்கிற்கு வர இயலாத மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இடத்திற்கே மாவட்ட ஆட்சித் தலைவர் விஷு மகாஜன் நேரடியாகச் சென்று அவர்களை நேரில் சந்தித்தார். அவர்களின் பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகள் அடங்கிய 18 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட அவர், அவர்களின் குறைகளைக் கனிவுடன் கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மூ. குருச்சந்திரன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் ரா. கௌதம், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ரமணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தில்வேல் முருகன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) நாகராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம், துணை ஆட்சியர் (பயிற்சி) மகேந்திரன் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த மாவட்ட அரசு அலுவலர்களும், அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது: 2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள், பைக் பறிமுதல்!
புதன் 10, ஜூன் 2026 9:16:40 PM (IST)

சாலை விபத்தில் அரிசிக்கடை உரிமையாளர் பலி!
புதன் 10, ஜூன் 2026 8:20:13 PM (IST)

முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
புதன் 10, ஜூன் 2026 4:53:29 PM (IST)

ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 3பேர் கைது!
புதன் 10, ஜூன் 2026 4:48:08 PM (IST)

கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
புதன் 10, ஜூன் 2026 4:32:10 PM (IST)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்!
புதன் 10, ஜூன் 2026 4:02:44 PM (IST)









