» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இடைசெவல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

திங்கள் 1, ஜூன் 2026 12:25:07 PM (IST)



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர் கணேசனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா கோவில்பட்டி தங்க மஹாலில் நடந்தது.

இடைசெவல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விற்பனையாளர் பணி முதல் செயலர் பணி வரை 39 ஆண்டுகள் பணிபுரிந்து பணி நிறைவு பெற்ற கணேசனுக்கு பணி நிறைவு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார்.

மாவட்டத் துணைத் தலைவர் வேல்ராஜ்,பொருளாளர் தம்பிராஜ்,மாவட்ட இணை செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க கௌரவ பொது செயலாளர் ஜேசுராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணி நிறைவு பெற்ற கணேசனுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.பணி நிறைவு பெற்ற இடை செவல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் கணேசன் ஏற்புரை வழங்கினார். 

இதில் கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள்,கூட்டுறவுத்துறை அலுவலர்கள், தணிக்கை துறை அலுவலர்கள், ஓய்வு பெற்ற சங்க பணியாளர்கள், பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள், இடைசெவல், சத்திரப்பட்டி, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானார் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில்பட்டி,கயத்தார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory