» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 150 சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு: நடவடிக்கை எடுக்க அமைச்சரிடம் மனு!

திங்கள் 1, ஜூன் 2026 10:18:56 AM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முடங்கியுள்ள 150 கண்காணிப்பு கேமராக்களை உடனடியாகச் சீரமைக்கக் கோரி, 'எம்பவர் இந்தியா' நுகர்வோர் அமைப்பு சார்பில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் மாவட்ட அறிவியல் மையம் : எம்பவர் இந்தியா கோரிக்கை!!இதுகுறித்து 'எம்பவர் இந்தியா' நுகர்வோர் கல்வி, ஆராய்ச்சி மையம்  செயல் இயக்குனர் ஆ. சங்கர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு அனுப்பியுள்ள மனுவில், "தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள 150 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களும் தற்போது முற்றிலும் செயலிழந்து காணப்படுகின்றன. 

மாநிலத்தின் மிகவும் பதற்றமான நகரங்களில் ஒன்றாகத் தூத்துக்குடி கருதப்படுவதால், மருத்துவமனை வளாகத்தின் பாதுகாப்பு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எனவே, நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருதி, இவற்றை மிகக் கூடிய விரைவில் செயல்பாட்டிற்குக் கொண்டு வர மருத்துவமனை நிர்வாகத்திற்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பல்நோக்குச் சிறப்பு மருத்துவமனைக்குத் தங்குதடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்யும் பொருட்டு, அங்குச் சூரிய ஆற்றல் வசதியை உருவாக்குவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டைத் தமிழக அரசிடமிருந்து பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் அன்றாடச் செயல்பாடுகள் மற்றும் மக்கள் சேவையை மேம்படுத்தும் நோக்கில், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நோயாளி நலச் சங்கத்திற்கான புதிய நிர்வாகக் குழுவை உடனடியாக அமைக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்திற்குத் தகுந்த முறையில் அறிவுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory