» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூரில் 80 அடி தூரம் உள்வாங்கிய கடல்: பக்தர்கள் அச்சமின்றி புனித நீராடல்!
திங்கள் 1, ஜூன் 2026 8:18:06 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரைப் பகுதியில் பவுர்ணமியையொட்டி நேற்று திடீரென கடல் சுமார் 80 அடி தூரத்திற்கு உள்வாங்கியது. எனினும், ஆன்மீகப் பயணிகள் மற்றும் பக்தர்கள் எவ்வித அச்சமுமின்றி கடலில் புனித நீராடினர்.
பொதுவாகத் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில் பவுர்ணமி, அமாவாசை மற்றும் அதற்கு முன்தினம், மறுநாட்களில் கடல் உள்வாங்குவதும், பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்புவதும் வாடிக்கையான இயற்கை நிகழ்வாகவே இருந்து வருகிறது.
அதன்படி, பவுர்ணமி தினமான நேற்று காலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகில் தொடங்கி அய்யா வைகுண்டர் அவதாரபதி வரையிலான கடற்கரைப் பகுதியில் கடல் திடீரென உள்வாங்கியது. சுமார் 80 அடி தூரத்திற்குத் தண்ணீர் பின்னோக்கிச் சென்றதால், கடலுக்குள் இருக்கும் பாசி படர்ந்த பாறைகள் அனைத்தும் வெளியே தெரிந்தன.
இதனைக் கண்டு அச்சமடையாத பக்தர்கள் வழக்கம் போல் கடலில் இறங்கிப் புனித நீராடினர். மேலும், கடற்கரைக்கு வந்திருந்த சிலர் பாசி படர்ந்த பாறைகளின் மீது ஆர்வமுடன் ஏறி நின்று செல்ஃபி புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் மாலையில் கடல் மீண்டும் தனது பழைய இயல்பு நிலைக்குத் திரும்பியது.
கோடை விடுமுறை நிறைவு - 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்:
கோடை விடுமுறையின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று, திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவிலில் வழக்கத்தை விட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் திரளாகக் குவிந்தனர். அதிகாலையிலேயே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடிய பக்தர்கள், பொது விநியோக வரிசையிலும் கட்டண வரிசையிலும் சுமார் 4 மணி நேரம் நீண்ட பிரகார வரிசையில் பொறுமையுடன் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, நேற்று அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனை ஆகியவை மிகச் சிறப்பாக நடைபெற்றன. தொடர்ந்து மற்ற கால காலமுறை பூஜைகளும் வழக்கம் போல பக்தி சிரத்தையுடன் நடத்தப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது: 2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள், பைக் பறிமுதல்!
புதன் 10, ஜூன் 2026 9:16:40 PM (IST)

சாலை விபத்தில் அரிசிக்கடை உரிமையாளர் பலி!
புதன் 10, ஜூன் 2026 8:20:13 PM (IST)

முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
புதன் 10, ஜூன் 2026 4:53:29 PM (IST)

ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 3பேர் கைது!
புதன் 10, ஜூன் 2026 4:48:08 PM (IST)

கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
புதன் 10, ஜூன் 2026 4:32:10 PM (IST)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்!
புதன் 10, ஜூன் 2026 4:02:44 PM (IST)









