» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் விவரங்கள் பொருத்தும் பணி: ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு!
வியாழன் 16, ஏப்ரல் 2026 4:25:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணிகளை ஆட்சியர் விஷு மகாஜன் இன்று ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வரும் இப்பணிகளின் போது, வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. பெல் (BEL) நிறுவனப் பொறியாளர்கள் மூலம் VVPAT இயந்திரங்களில் குறியீடு ஏற்றுதல் மற்றும் Control Unit (CU)-ல் வேட்பாளர் தரவுகளைப் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒதுக்கப்படும் இயந்திரங்களின் எண்கள் (CU, BU, VVPAT numbers) இறுதி செய்யப்பட்டு, தேர்தல் ஆணைய விதிப்படி சீலிடப்படுகின்றன. ஏதேனும் இயந்திரத்தில் குறைபாடு கண்டறியப்பட்டால், அவை உடனடியாக மாற்றப்பட்டுத் தயார் நிலையில் வைக்கப்படும்.
வாக்காளர்களின் வசதிக்காக இந்த முறை பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் குறிப்பிட்டார்: மின்சாரம், குடிநீர், கழிப்பறை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிக்குள் கைபேசிகளுக்கு அனுமதி இல்லாததால், இந்த முறை புதிய வசதியாக டோக்கன் (Token) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்கள் கைபேசிகளை வெளியே ஒப்படைத்துவிட்டு, வாக்களித்த பின் பெற்றுக் கொள்ளலாம்.
பாகம் எண் (Part No) மற்றும் வரிசை எண் தெரியாதவர்களுக்கு உதவ, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலம் 'Booth Facilitation Desk' அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளதாகவும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் தேர்தல் காவல் பார்வையாளர் தலைமையில் பாதுகாப்புத் திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா, கூடுதல் ஆட்சியர் இரா. ஐஸ்வர்யா, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் என்னைச் சந்திக்கவே இல்லை: த.வெ.க-வை விட்டு விலகிய அஜிதா ஆக்னல் குற்றச்சாட்டு!
வியாழன் 16, ஏப்ரல் 2026 8:39:53 PM (IST)

தூத்துக்குடியில் கீதா ஜீவன் தீவிர வாக்கு சேகரிப்பு : பூ மார்க்கெட், குடியிருப்புப் பகுதிகளில் ஆதரவு திரட்டல்!
வியாழன் 16, ஏப்ரல் 2026 8:10:56 PM (IST)

தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது: தொகுதி மறுவரையறை குறித்து கிருஷ்ணசாமி கருத்து!
வியாழன் 16, ஏப்ரல் 2026 5:52:09 PM (IST)

கருணாநிதியின் கொள்கைகளைத் திமுகவினர் புதைத்து விட்டார்கள் - குஷ்பூ காட்டம்!
வியாழன் 16, ஏப்ரல் 2026 5:34:04 PM (IST)

தொகுதி மக்களுக்காக முழுவீச்சில் பணியாற்றினேன் : விளாத்திகுளத்தில் மார்கண்டயேன் வாக்குசேகரிப்பு!
வியாழன் 16, ஏப்ரல் 2026 3:44:27 PM (IST)

திமுக அரசு பொய் வாக்குறுதிகளைக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டது - அதிமுக வேட்பாளர் சத்யா குற்றச்சாட்டு!
வியாழன் 16, ஏப்ரல் 2026 3:32:14 PM (IST)






