» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்!

வெள்ளி 6, மார்ச் 2026 8:39:00 PM (IST)



தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மாணவர் சங்கம் சார்பில், "மகளிர் மேம்பாடு" என்ற கருப்பொருளின் அடிப்படையில் சர்வதேச மகளிர் தின விழா கயல் கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவையொட்டி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன: 

"பாரதி கண்ட பெண்ணுரிமை கனவு கனவேயானதா அல்லது நனவானதா?" என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. குழு நடனம், பாடல் மற்றும் ஊமை நாடகம் (Mime) போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மாலை 4 மணியளவில் நடைபெற்ற நிறைவு விழாவிற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சீ.ஆ. சண்முகம் தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார். 

மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் பா. கணேசன் வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் முதல்வர் முனைவர் கே. பானுமதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரை வழங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவின் நிறைவாக, மாணவர் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் அ. ஜெய்பிரகாஷ் நன்றியுரை வழங்க, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory