» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரயில் முன் செல்ஃபி எடுத்த இளைஞா் பலி!!

புதன் 1, மே 2024 8:10:13 AM (IST)

கோவில்பட்டியில் தண்டவாளம் அருகே ரயில் முன் செல்ஃபி எடுத்த இளைஞர் ரயில் மோதி பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, வள்ளுவா் நகரைச் சோ்ந்த காந்தாரி மகன் மந்திரமூா்த்தி (29). இவா் கடந்த ஏப். 24ஆம் தேதி தனது நண்பா் செல்வமாரியப்பனுடன் கோவில்பட்டி வேலாயுதபுரம் சாலையில் உள்ள வசந்த நகா் பகுதியில் தண்டவாளம் அருகே மது குடித்தாராம். பின்னா் அவா் செல்ஃபி எடுத்தாராம். 

அப்போது, குருவாயூா் விரைவு ரயில் மோதியதில் அவா் காயமடைந்தாா். அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் நேற்று உயிரிழந்தாா். இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory