» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோரம்பள்ளத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் : சமூக ஆர்வலர் கோரிக்கை

சனி 27, ஏப்ரல் 2024 10:42:56 AM (IST)



தூத்துக்குடியில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கோரம்பள்ளம் பகுதியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார். 
      
இது தொடர்பாக சமூக ஆர்வலர் பாலசந்தர் வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகாமையில் உள்ள கோரம்பள்ளம் கிராமம் தற்போது மக்கள் வாழ தகுதியற்ற கிராமமாக மாறிக் கொண்டிருக்கிறது. பெரும் வெள்ளத்திற்கு பிறகு ஊரின் முகப்பு பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த  பெரியோர்கள் வரை செல்ல தகுதியற்ற சாலையாக உள்ளது. கழிவுநீர் வடிகால்கள் இருந்தும், பட்டா இடத்தில் கழிவுநீர் தேங்கும் அவல நிலை உள்ளது. 

தனியார் அட்டை கம்பெனி ஒன்று அதன் நுழைவு வாயிலில் டிரான்ஸ்பார்மர் அமைத்து அந்தப் பகுதியில் வாழும் பொது மக்களுக்கு மிகவும் இடையூறாக ஆபத்தான முறையில் அமைந்துள்ளது. கோரம்பள்ளம் குளக்கரையில்  குப்பைகளை கொட்டி தீ வைத்து குழந்தைகளுக்கும் பொது மக்களுக்கும் அசுத்த காற்று சுவாசிக்கும் வகையில் இடையூறு ஏற்படுத்தும் விதமாக பல விஷயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களைத் திரட்டி  போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory