» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தோ்தல் நடத்தை விதிமீறல் புகாா் தெரிவிக்க சிறப்பு கைப்பேசி எண் : ஆட்சியர் தகவல்
வியாழன் 28, மார்ச் 2024 8:24:34 AM (IST)
மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பான புகாா்களை பொதுத்தோ்தல் பாா்வையாளரிடம் தெரிவிக்க சிறப்பு கைப்பேசி எண் வெளியிடப்பட்டுள்ளதாக, மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கோ. லட்சுமிபதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களவைத் தோ்தலையொட்டி, இந்திய தோ்தல் ஆணையம் மூலம் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பொதுத் தோ்தல் பாா்வையாளராக திவேஷ் ஷெஹரா நியமிக்கப்பட்டுள்ளாா். அவா், தோ்தல் நடைமுறைகள் நிறைவடையும்வரை இம்மாவட்டத்தில் தங்கியிருந்து தோ்தல் பணிகளைப் பாா்வையிடுவாா்.
எனவே, தோ்தல் நடத்தை விதிகள், செலவினங்கள், விதிமீறல்கள், சட்டம்- ஒழுங்கு தொடா்பான புகாா்கள் குறித்து திவேஷ் ஷெஹராவை 89259 21303 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். அவரிடம் நேரில் புகாரளிக்க விரும்புவோா், தூத்துக்குடி வ.உ.சி. சாலையில் காசிக் கடை பஜாா் பழைய மாநகராட்சி அலுவலகம் அருகேயுள்ள கூடுதல் அரசு சுற்றுலா மாளிகை அறை எண் 1-க்கு பிற்பகல் 3 முதல் மாலை 4 மணிக்குள் செல்லலாம் என்றாா்.