» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் நாளை முதல்வர் ஸ்டாலின் நடை பயிற்சி!
திங்கள் 25, மார்ச் 2024 7:47:12 AM (IST)
தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை ராஜாஜி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்நிலையில், நாளை மார்ச் 26-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகில் உள்ள சிந்நலக்கரையில் நடைபெறும் திமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளருமான கனிமொழி கருணாநிதியை ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்கவுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 25.03.2024 மதியம் 3.30 மணிக்கு இல்லத்தில் இருந்து புறப்பட்டு 3.50 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்று பின்பு 4.00 மணிக்கு சிறப்பு விமானத்தில் பயணம் செய்து 5.10 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் சென்று பின்பு அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சென்று நிகழ்ச்சி முடிந்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக தூத்துக்குடி சென்று சத்யா ரிசார்ட்டில் இரவு தங்குகிறார்.
நாளை 26.03.2024 மாலை 5.00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக எட்டயபுரம் சென்று நிகழ்ச்சி முடிந்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக விருதுநகர் ராம்கோ கெஸ்ட் ஹவுஸ் சென்று இரவு தங்குகிறார்.
அதற்கு மறுநாள் 27.03.2024 மாலை 5.00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக கிருஷ்ணன் கோயில் நிகழ்விடம் சென்று நிகழ்ச்சி முடிந்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக மதுரை விமான நிலையம் வந்து 8.00 மணிக்கு சிறப்பு விமானத்தில் பயணம் செய்து 9.00 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து பின்பு அங்கிருந்து புறப்பட்டு 9.30 மணிக்கு இல்லம் வருகிறார்.
தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை (மார்ச் 26) ராஜாஜி பூங்காவில் நடை பயிற்சி மேற்கொள்கிறார். இதற்காக பூங்காவில் தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.