» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கனிமங்களை பிரித்தெடுக்கும் தொழிற்சாலை திட்டத்தை கைவிட இந்து முன்னணி கோரிக்கை
வெள்ளி 3, பிப்ரவரி 2023 8:37:09 AM (IST)
சாத்தான்குளம், குதிரைமொழியில் கனிமங்களை பிரித்தெடுக்கும் தொழிற்சாலை திட்டத்தை கைவிட இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இயற்கை வளங்களை அழித்து அரசின் வருவாயைப் பெருக்குவதால் அடுத்து வரும் தலைமுறையினரின் வாழ்க்கை பாதிக்கும். இரு பகுதிகளிலும் உள்ள தேரிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் மணல் எடுப்பதன் மூலம் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதிக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்திலேயே நிலத்தடி நீர் மட்டம் உடன்குடி ஒன்றியத்தில்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலத்தடிநீர் மேம்பாட்டு வாரியம் எச்சரித்துள்ள நிலையில் இத்திட்டத்தை செயல்படுத்துவதன் முலம் இப்பகுதி முழுவதும் பாலைவனமாக மாறுவதோடு முழுமையாக விவசாயம்.
அதன் சார்பு தொழில்கள் அனைத்தும் அழிந்துபோகும். தேரிக்காட்டில் உள்ள புகழ்பெற்ற அய்யனார் கோவில்கள், எண்ணற்ற குலதெய்வக் கோவில்கள், சுனை, குடியிருப்புகள் என அனைத்தும் பாதிக்கப்படும். எனவே இயற்கையையும், விவசாயத்தையும் பாதுகாக்கும் வகையில் இத்திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும்' என அவர் ெதரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி ஆசிரியரை தாக்கியதாக மாணவனின் பெற்றோர் உட்பட 4பேர் கைது!
செவ்வாய் 21, மார்ச் 2023 8:28:04 PM (IST)

டி.சி.டபிள்யூ. சார்பில் உலக காடுகள் தினவிழா!
செவ்வாய் 21, மார்ச் 2023 7:45:25 PM (IST)

தமிழக பட்ஜெட் ஏமாற்றம்: அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 21, மார்ச் 2023 5:38:17 PM (IST)

தூத்துக்குடியில் வீடு புகுந்து 13 பவுன் நகை திருடிய வாலிபர் கைது - நகைகள் மீட்பு
செவ்வாய் 21, மார்ச் 2023 5:31:38 PM (IST)

தேர்வு கட்டண உயர்வு வாபஸ்: மாணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
செவ்வாய் 21, மார்ச் 2023 3:55:07 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது குறித்து ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு!
செவ்வாய் 21, மார்ச் 2023 3:28:26 PM (IST)
