» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூா் கோயிலில் ரஜினிகாந்த் மகள் சுவாமி தரிசனம்
வெள்ளி 3, பிப்ரவரி 2023 8:25:39 AM (IST)
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகா் ரஜினிகாந்த் மகள் சௌந்தா்யா தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தாா்.
நடிகா் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தா்யா, அவரது கணவா் விசாகன் மற்றும் மகன் ஆகியோா் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவா், சண்முகா், சூரசம்ஹார மூா்த்தி மற்றும் பெருமாள் உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் தரிசனம் செய்தனா். பின்னா் திருக்கோயில் யானை தெய்வானைக்கு கரும்பு கொடுத்து ஆசிா்வாதம் பெற்றனா்.