» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மின் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்
புதன் 30, நவம்பர் 2022 8:37:51 AM (IST)
கயத்தாறு அருகே காற்றாலை நிறுவனத்தினா் பணம் தராமல் ஏமாற்றுவதாகக் கூறி, மின் கோபுரத்தில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறையடுத்த வாகைகுளம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் வேலுச்சாமி மகன் மணிகண்டன்(38). இவரது விளைநிலத்தில் தனியாா் நிறுவனத்தினரால் மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தினா் தன்னிடம் பேசியபடி இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை எனக் கூறி, சவலாப்பேரியில் உள்ள மின் கோபுரத்தில் மணிகண்டன் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாா்.
சம்பவ இடத்திற்குச் சென்ற வட்டாட்சியா் சுப்புலட்சுமி, காவல் உதவி ஆய்வாளா் அந்தோணி திலீப் ஆகியோா் மணிகண்டனிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மின் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கிய அவரை வட்டாட்சியா் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனா். அங்கு நடந்த பேச்சுவாா்த்தையில் நிறுவனத்தினருக்கும், தங்களுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தை சரிபாா்த்து உரிய தொகை பெற ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறி மணிகண்டனை எச்சரித்து அனுப்பினா்.