» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார் ஆய்வு

திங்கள் 28, நவம்பர் 2022 5:09:51 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை அலுவலகங்களில், திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு ஒரு முறை காவல்துறையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் வருடாந்திர ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை துப்பறியும் நாய்ப்படை பிரிவு, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை, தூத்துக்குடி நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு ஆகியவற்றை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர்  பிரவேஷ் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் முன்னிலையில் ஆய்வு செய்து மேற்படி பிரிவு அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சம்பத், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, காவல் ஆய்வாளர் தேவி, உதவி ஆய்வாளர் ஸ்ரீகுமார் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory