» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மொபட் மீது கார் மோதல்; ஜவுளிக்கடை அதிபர் பலி

செவ்வாய் 4, அக்டோபர் 2022 7:46:52 AM (IST)

கோவில்பட்டி அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் ஜவுளிக்கடை அதிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேலத் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் ரூபன் ராஜ் (28). ஜவுளிக்கடை உரிமையாளர். நேற்று முன்தினம் இரவு ரூபன் ராஜ் மொபட்டில் கோவில்பட்டி வந்துள்ளார். பின்னர் கோவில்பட்டியில் இருந்து மொபட்டில் சாத்தூருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். கோவில்பட்டி- சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆவல்நத்தம் சந்திப்பில் அவர் சென்றபோது, மதுரையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. 

இதில் மொபட்டிலிருந்து தூக்கி வீசப்பட்ட ரூபன் ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் திருவனந்தபுரத்தை சேர்ந்த சுரேந்திரன் மகன் சுபாஷ் (27) என்பவரை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory