» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பசுமை ஆசிரியர் விருது
செவ்வாய் 27, செப்டம்பர் 2022 10:15:59 AM (IST)
தருமபுரியில் நடைபெற்ற விழாவில் புதூர் பள்ளிகளை சேர்ந்த வேளாண் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பசுமை ஆசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
தர்மபுரி பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை தொடக்க விழா மற்றும் பசுமை ஆசிரியர் விருது வழங்கும் விழா ஆகிய இரு பெரும் விழா தா்மபுரியில் நடந்தது. பசுமை மற்றும் அறக்கட்டளை நிறுவனர் மகேந்திரன் தலைமை வகித்தாா். இவ்விழாவில் தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளி, அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் 51 ஆசிரியர்களை தேர்வு செய்து விருது வழங்கப்பட்டது.
இதில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா புதூர் யூனியனை சேர்ந்த புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி தொழில்கல்வி வேளாண் ஆசிரியர் காளிராஜ், நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல் நிலைப்பள்ளி தொழிற்கல்வி வேளாண் ஆசிரியர் சுரேஷ்குமார் ஆகிய இருவருக்கும் "பசுமை ஆசிரியர் விருது” வழங்கப்பட்டது.
KVP kumarSep 27, 2022 - 01:00:58 PM | Posted IP 162.1*****