» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பொதுமக்கள் திடீர் சாலை மறியல்: போக்குவரத்து முடங்கியது
திங்கள் 27, ஜூன் 2022 12:21:24 PM (IST)
ஆத்தூர் பஜாரில் பொதுமக்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், திருச்செந்தூர் - தூத்துக்குடி போக்குவரத்து முடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள குமராபண்ணையூர்,செல்வன்புதியனூர் புதுநகர், செல்லும் பாதை கடந்த 18 வருடங்களாக சீரமைக்கப்படாமல் இருப்பதால் அதை புதுப்பித்து தரக் கோரியும், ஆத்தூர் - புன்னகாயல் ரோட்டில் டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யக்கோரியும் ஆத்தூர் மெயின் பஜாரில் பொதுமக்கள் ஒன்று திரண்டு மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் திருச்செந்தூர் - தூத்துக்குடி இடையே போக்குவரத்து முடங்கியது. மாற்றுப்பாதையில் பேருந்துகள் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து தகவல் அறிந்து ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.