» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொதுமக்கள் திடீர் சாலை மறியல்: போக்குவரத்து முடங்கியது

திங்கள் 27, ஜூன் 2022 12:21:24 PM (IST)



ஆத்தூர் பஜாரில் பொதுமக்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால்,  திருச்செந்தூர் - தூத்துக்குடி போக்குவரத்து முடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள குமராபண்ணையூர்,செல்வன்புதியனூர் புதுநகர், செல்லும் பாதை கடந்த 18 வருடங்களாக சீரமைக்கப்படாமல்  இருப்பதால் அதை புதுப்பித்து தரக் கோரியும், ஆத்தூர் - புன்னகாயல் ரோட்டில்  டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யக்கோரியும் ஆத்தூர் மெயின் பஜாரில் பொதுமக்கள் ஒன்று திரண்டு மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதனால் திருச்செந்தூர் - தூத்துக்குடி இடையே போக்குவரத்து முடங்கியது. மாற்றுப்பாதையில் பேருந்துகள் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து தகவல் அறிந்து ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory