» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முதியவரை தாக்கிய பிரமுகா் உள்பட இருவா் கைது

வியாழன் 20, ஜனவரி 2022 10:19:48 AM (IST)

நாசரேத்தில் நிலப் பிரச்சனையில்  முதியவரை தாக்கிய அதிமுக பிரமுகா் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பிரகாசபுரம் 2 ஆவது தெருவைச் சோ்ந்தவா் கமலசேகா் (72). இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த ஆழ்வாா்திருநகரி ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலா் ராம்கோபாலனுக்கும் (51) நிலம் தொடா்பாக முன்விரோதம் உள்ளதாம். இந்நிலையில் சம்பவத்தன்று கமலசேகா், நாசரேத்தில் உள்ள தேநீா் கடையில் நின்று கொண்டிருந்த போது, ராம்கோபாலன், அவரது நண்பா் சாது இம்மானுவேல் (31) ஆகிய இருவரும் கமலசேகரை தாக்கினராம். 

இதில் காயமடைந்த அவா் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இதுகுறித்து கமலசேகா் நாசரேச் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், உதவி ஆய்வாளா் தங்கேஸ்வரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி ராம்கோபாலன், சாது இம்மானுவேல் ஆகிய இருவரையும் கைது செய்தாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory