» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பெருமாள் கோவிலில் ரூ.4கோடி செலவில் திருப்பணிகள் : அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்!
திங்கள் 17, ஜனவரி 2022 12:21:18 PM (IST)
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவில் ரூ.4 கோடி செலவில் திருப்பணிகளை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீவைகுண்டபதி பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சுற்றுசுவர் முழுவதும் 63 கல் தூண் அமைத்தல், சுவாமி சன்னதிகளை சீரமைத்தல் உள்பட சுமார் ரூ.4 கோடி மதிப்பில் 35ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிகளின் தொடக்க விழா இன்று பூஜையுடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைதுறை அமைச்சர் பி.கீதாஜீவன் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
விழாவில் இந்துசமய அறநிலையதுறை இணை ஆணையர் அன்புமணி, கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, திருப்பணி கமிட்டி தலைவர் விஎஸ்ஏ ஜெயராமன, துணைத் தலைவர் ஏவிஎம் முத்துராஜ், செயலாளர் ஆர்.ராதா கிருஷ்ணன், கருப்பசாமி, கேகேஜி இளங்கோவன், அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம், உஷா தேவி, கோவில் அர்ச்சகர் வைகுண்டராமன், முக்கிய பிரமுககர்கள் ஆனந்தசேகரன், ஏ.சி.செந்தில் குமார், மந்திரமூர்த்தி, கந்தசாமி, சுரேஷ்குமார், கோட்டுராஜா,ராமாகிருஷ்ணன், சுப்பிரமணிய சுவாமி மகமை தலைவர் கந்தையா, எல்ஐசி சிவராமகிருஷணன், பிஎஸ்கே.ஆறுமுகம், பொறியாளர் ரெங்கசாமி, ஸ்தபதி ரமேஷ், வழக்கறிஞர் நீலவேணி, எம்ஆர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
kumarJan 18, 2022 - 01:18:11 PM | Posted IP 108.1*****