» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூா் கோயிலில் ரூ. 1.53 கோடி உண்டியல் காணிக்கை வசூல்
புதன் 2, டிசம்பர் 2020 8:23:40 AM (IST)
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் மூலம் ரூ. 1.53 கோடி காணிக்கை வசூலாகியுள்ளது.

கோயில் இணை ஆணையா் (பொ) சி.கல்யாணி தலைமையில், உதவி ஆணையா்கள் தூத்துக்குடி சு.ரோஜாலி சுமதா, திருச்செந்தூா் வே.செல்வராஜ், ஆய்வா்கள் மு.முருகன், பூ.நம்பி, தக்காா் பிரதிநிதி ஆ.சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் ஆகியோா் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தா் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரப் பணிக் குழுவினா் மற்றும் கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.
இதன்படி உண்டியல் எண்ணிக்கையில், கோயில் நிரந்தர உண்டியல்களில் ரூ. 1 கோடியே 53 லட்சத்து 38 ஆயிரத்து 556 ரூபாயும், தங்கம் 1,112 கிராம், வெள்ளி 6,922 கிராம், பித்தளை 11,660 கிராம், செம்பு 2,910 கிராம், தகரம் 1,720 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 121-ம் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது
புதன் 27, ஜனவரி 2021 5:21:54 PM (IST)

டெல்லி வன்முறை : விவசாயிகளுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
புதன் 27, ஜனவரி 2021 5:07:58 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 17 பேருக்கு எஸ்பி பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.
புதன் 27, ஜனவரி 2021 4:12:51 PM (IST)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்த தான முகாம்
புதன் 27, ஜனவரி 2021 4:02:18 PM (IST)

ஜன.29ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆய்வு!!
புதன் 27, ஜனவரி 2021 3:22:46 PM (IST)

எழுத்தாளர் முதுதாலங்குறிச்சி காமராசுவுக்கு விருது
புதன் 27, ஜனவரி 2021 3:12:06 PM (IST)
