» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: நாடு திரும்ப வீரர்கள் கோரிக்கை; இலங்கை வாரியம் எச்சரிக்கை!
வியாழன் 13, நவம்பர் 2025 10:16:06 AM (IST)

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு எதிரொலியாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்ப கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்களது கோரிக்கையை இலங்கை வாரியம் நிராகரித்துள்ளது.
பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இலங்கை அணி முதல் ஒருநாள் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. அடுத்ததாக 2, 3-ஆவது ஒருநாள் போட்டிகள் முறையே நவ.13, நவ.15 ஆம் தேதிகளில் விளையாடுகிறது. அனைத்துப் போட்டிகளும் ராவல்பிண்டி திடலில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், ராவல்பிண்டி அருகேவுள்ள இஸ்லாமாபாத்தில் நவ. 11 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புக் காரணமாக 8 வீரர்கள் நாடு திரும்புவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, அடுத்த 2 ஒருநாள் போட்டிகளை ரத்து செய்துவிட்டு, இலங்கை வீரர்கள் நாடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், போட்டிகளை ரத்து செய்துவிட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்திருப்பது வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாகிஸ்தான் அரசு முழுப் பாதுகாப்பு அளிப்பதாக உறுதி செய்திருப்பதாகவும், முடிவை மீறி வீரர்கள் நாடு திரும்பினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜகார்த்தாவில் தனியார் அலுவலகத்தில் பயங்கர தீவிபத்து : கர்ப்பிணி உள்பட 20 பேர் சாவு
புதன் 10, டிசம்பர் 2025 8:45:58 AM (IST)

புதின் வருகை எதிரொலி : இந்திய அரிசிக்கு வரியை இரட்டிப்பாக டிரம்ப் பரிசீலனை!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 10:27:29 AM (IST)

எலான் மஸ்க் நிறுவனத்துக்கு ரூ.1,250 கோடி அபராதம்: ஐரோப்பிய ஆணையம் நடவடிக்கை
சனி 6, டிசம்பர் 2025 4:43:51 PM (IST)

இஸ்ரேல் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி நிச்சயம் : பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:39:34 PM (IST)

கொலை வழக்கில் இந்தியர் குறித்து துப்புக்கொடுத்தால் ரூ.45 லட்சம் வெகுமதி: அமெரிக்கா அறிவிப்பு
வியாழன் 4, டிசம்பர் 2025 12:48:43 PM (IST)

ஆப்கானிஸ்தானில் கொடூர குற்றவாளிக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய சிறுவன்..!
புதன் 3, டிசம்பர் 2025 5:15:22 PM (IST)










