» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் ரூ.898 கோடி பொருட்களை கொள்ளையடித்த 2 பேர் கைது
திங்கள் 27, அக்டோபர் 2025 8:58:03 AM (IST)

பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் ரூ.898 கோடி பொருட்களை கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மிகப்பெரிய லூவ்ரே அருங்காட்சியகம் அமைந்துள்ளது. ஈபிள் கோபுரத்துக்கு அடுத்தபடியாக அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக இது திகழ்கிறது. கடந்த வாரம் இந்த அருங்காட்சியகத்தில் முகமூடியுடன் சிலர் நுழைந்தனர். பின்னர் மின் கருவிகளை பயன்படுத்தி வைர கிரீடம் உள்ளிட்ட விலைமதிப்பு மிக்க பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடினர்.
அவற்றின் மதிப்பு சுமார் ரூ.898 கோடி ஆகும். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் இருந்து குற்றவாளிகள் வெளிநாடு தப்பி செல்ல முயற்சிப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்த போலீசார் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இஸ்ரேல் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி நிச்சயம் : பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:39:34 PM (IST)

கொலை வழக்கில் இந்தியர் குறித்து துப்புக்கொடுத்தால் ரூ.45 லட்சம் வெகுமதி: அமெரிக்கா அறிவிப்பு
வியாழன் 4, டிசம்பர் 2025 12:48:43 PM (IST)

ஆப்கானிஸ்தானில் கொடூர குற்றவாளிக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய சிறுவன்..!
புதன் 3, டிசம்பர் 2025 5:15:22 PM (IST)

பேச்சுவார்த்தைக்குகூட யாரும் இருக்க மாட்டீர்கள்: ஐரோப்பிய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை!
புதன் 3, டிசம்பர் 2025 12:28:09 PM (IST)

நோபல் பரிசு பெற்ற இந்தியரின் நினைவாக மகனுக்கு சேகர் என்று பெயர் சூட்டிய எலான் மஸ்க்
புதன் 3, டிசம்பர் 2025 8:25:48 AM (IST)

இந்தியாவின் வளர்ச்சிக்கு, நாங்கள் தோளோடு தோளாக... ரஷ்ய அதிபர் மாளிகை..!!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 5:42:52 PM (IST)










