» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

நகர்ப்புற தேர்தலில் திமுக அபார வெற்றி: முதல்வர் ஸ்டாலினுக்கு துரைமுருகன் வாழ்த்து!

செவ்வாய் 22, பிப்ரவரி 2022 3:48:37 PM (IST)

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றன. காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பெரும்பான்மையான பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வரின் முகாம் அலுவலகத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்த துரைமுருகன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராஜா, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory