» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
இரவு 10 மணி வரை தேர்தல் பிரசார நேரம் நீட்டிப்பு: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வெள்ளி 11, பிப்ரவரி 2022 5:16:04 PM (IST)
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்திற்கான நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டித்து மாநில தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தல் பிரசாரத்திற்கான நேரத்தை நீட்டித்து மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாவது, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரசாரம் மேற்கொள்ளலாம். பிரசாரத்தின் போது கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மற்றும் பொது மக்கள் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.