» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மாணவ, மாணவிகளுக்கு நோட்டு வழங்கும் விழா
செவ்வாய் 17, ஜூன் 2025 12:12:13 PM (IST)
தூத்துக்குடி மாப்பிள்ளையூரனியில் அன்னை தெரசா நற்பணி மன்றத்தின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரனி ஊராட்சியில், அன்னை தெரசா நற்பணி மன்றத்தின் சார்பில் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தொடர்ந்து 5வது ஆண்டாக இலவச நோட்டு வழங்கும் விழா மாதா நகரில் நற்பணி மன்ற பொறுப்பாளர் தொம்மை அந்தோணி தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட வழக்கறிஞர் மோகன் தாஸ், அரசு மருத்துவமனை எலும்பு முறிவு டாக்டர் ஜேம்ஸ் சுந்தர்சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்கு இலவச நோட்டு வழங்கி சிறப்புரை ஆற்றினர். முன்னதாக மன்ற நிர்வாகி விமல் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக மன்ற நிர்வாகி வினோ நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்வில் மன்ற நிர்வாகிகள் அழகர், முத்து, மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

