» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் சமுதாய கல்லூரியில் பரிசளிப்பு விழா!

செவ்வாய் 26, செப்டம்பர் 2023 3:32:41 PM (IST)



நாசரேத் சமுதாய கல்லூரியில் திறன்  போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

நாசரேத் பரி.லூக்கா மருத்துவமனை வளாகத்தில் உள்ள நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில்  திறன்  விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. ரங்கோலி, நீளம் தாண்டுதல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெற்றது.

நிகழ்விற்கு கல்லூரி இயக்குநர் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். கண்ணன் டிபார்ட்மெண்ட  ஸ்டோரஸ் உரிமையாளர் தனுஷ்கரன் வழங்கிய பரிசு பொருட்களை வெற்றி பெற்ற  மாணவிகளுக்கு கல்லூரி தாளாளர் செல்வின் வழங்கினார். நிறைவாக கல்லூரி மேலாளர் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory