» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நல்லாசிரியர் விருது பெற்ற அகரம் பள்ளி தலைமை ஆசிரியைக்கு பாராட்டு விழா!
புதன் 13, செப்டம்பர் 2023 5:21:07 PM (IST)
நல்லாசிரியர் விருது பெற்ற அகரம் பள்ளி தலைமை ஆசிரி யைக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், அகரம் தூத்துக் குடி-நாசரேத் திருமண்டல அறக்கட்டளை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சசிலதா அகஸ்டின் தமிழக அரசால் நல்லாசிரியர் விரு தினை பெற்று வந்த அவரு க்கு பள்ளி மற்றும் ஊர் சார் பில் அகரம் நடுநிலைப்பள் ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.விழா விற்கு கல்வித்துறை அதி காரிகள் தாசன், செல்வக்கு மார்,ஜெயபாலன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தலைமை ஆசிரியை சசிலதாவிற்கு நினைவு பரிசுகள் பொன்னாடைகள் மலர் மாலைகள் அணிவித்து கௌரவிக்கப் பட்டது.
இந்நிகழ்வில் தலைமை ஆசிரியைகள் அமுதா ஜான்சி, கனிசெல்வி, தலைமையாசிரியர் அல்போன்ஸ் ஆசிரியர் பாபையா, அகரம் ஜெபசிங், பஞ்சாயத்துதலை வர் அண்ணா ஜெயம், ஊர் பெரியவர் துரைப்பழம், பந் தல்கொடி, மாவடிபண்ணை சேகர், பைசோன், நாசரேத் காவல் உதவி ஆய்வாளர் ராய்ட்சன், சேகரத்தலைவர் அகஸ்டின்,சேகரசெயலாளர் இம்மானுவேல் ஜாண்சன், சேகரப் பொருளாளர் லாசர் ஜான்சிங்,குமார் உட்படபலர் கலந்து கொண்டு பாராட்டி பேசினர். நிகழ்ச்சியை ஆசிரியை புஷ்பலதா தொகுத்து வழங்கினார்.விழா ஏற்பாடு களை ஆசிரியர்கள் ரோஸ்லின், பிளாரன்ஸ், புஷ்பலதா ஜெபராணி ஆகியோர் செய் திருந்தனர்.