» சினிமா » செய்திகள்

பாலாவின் வணங்கான் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் : தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

செவ்வாய் 26, செப்டம்பர் 2023 12:22:06 PM (IST)



பாலாவின் "வணங்கான்" பெரும் அதிர்வை ஏற்படுத்தும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாலா தற்போது 'வணங்கான்' படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ரோஷினி பிரகாஷ் நாயகியாக நடிக்கிறார். மேலும், சமுத்திரக்கனி, மிஷ்கின் உட்பட பலர் நடிக்கின்றனர். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி, மற்றும் பாலாவின் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 

ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் முதல் தோற்ற போஸ்டர் நேற்று வெளியானது.கிணற்றுக்குள் இருந்து சகதியுடன் வெளியே வரும் அருண் விஜய், ஒரு கையில் பிள்ளையாரையும் மறு கையில் பெரியாரையும் தூக்கி வைத்திருக்கிறார். இந்தத் தோற்றம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுதொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளப் பதிவில், "இயக்குநர் பாலாவின் இதுவரையிலான படைப்புகள் மக்கள் மத்தியில் அதிர்வுகளை உருவாக்கியுள்ளன. அதே போல ‘வணங்கான்’ படத்தில், பெரும் அதிர்வை ஏற்படுத்தும் ஒரு கதையைத் தொட்டிருக்கிறார் என்பது மட்டும் நிச்சயம். சகோதரர் அருண்விஜய்க்கு மற்றுமொரு பெயர் சொல்லும் அவதாரம்” என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory