» சினிமா » செய்திகள்

வீரப்பன் வெப் தொடருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

செவ்வாய் 22, நவம்பர் 2022 4:35:24 PM (IST)



வீரப்பன் வெப் தொடருக்கு எதிரான தடை நீக்கப்பட்டுள்ளதால் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் டைரக்டர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் அறிவித்துள்ளார்.

சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெப் தொடராக ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கி வந்தார். இதில் வீரப்பன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்தார். வீரப்பனை வேட்டையாடும் போலீஸ் அதிகாரியாக விவேக் ஓபராயும், வீரப்பன் தந்தை கதாபாத்திரத்தில் கயல் தேவராஜும், குற்ற உளவியல் நிபுணராக விஜேதாவும் நடித்தனர்.

காட்டுக்குள் வீரப்பனால் கடத்தி செல்லப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமார் கதாபாத்திரத்தில் விவேக் ஓபராயின் தந்தை சுரேஷ் ஓபராய் நடித்தார். சத்திய மங்கலம் காடுகளில் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்த நிலையில் வீரப்பன் வெப் தொடருக்கு தடை விதிக்கக்கோரி அவரது மனைவி முத்துலட்சுமி தரப்பில் பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு வெப் தொடரை எடுக்க இடைக்கால தடை விதித்தது. இதனால் படப்பிடிப்பு நின்று போனது.

தற்போது வீரப்பன் வெப் தொடருக்கு எதிரான தடையை நீக்கி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து விட்டதாகவும் எனவே மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் டைரக்டர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் அறிவித்து உள்ளார். வீரப்பன் முழு வாழ்க்கை சம்பவங்களும் வெப் தொடரில் இடம்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?

திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory