» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திற்பரப்பு அருவியில் குளிக்க 7 நாள்களுக்குப் பிறகு அனுமதி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
ஞாயிறு 30, நவம்பர் 2025 10:34:28 AM (IST)
கன்னியாகுமரியில் மழையின் அளவு குறைந்ததால், திற்பரப்பு அருவியில் 7 நாள்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவியில் 7 நாள்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று(நவ. 30) அனுமதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 வார காலமாக பெய்த தொடர் மழை காரணமாக அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பின. இதில் பிரதான அணையான பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 45 அடியைக் கடந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீரானது மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.
பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீா் திறந்துவிடப்பட்ட நிலையில், திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கன்னியாகுமரியில் மழையின் அளவு குறைந்ததால், திற்பரப்பு அருவியில் 7 நாள்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறைவாக தண்ணீர் கொட்டும் இடங்களில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்..!!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:55:02 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்: மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் அழைப்பு
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:36:56 PM (IST)

குமரி சுற்றுலாத்தளத்தில் போலி பார்க்கிங் ரசீது தயாரித்து பணம் வசூல் - 2பேர் கைது!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:25:06 PM (IST)

நம்பியாறு நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார் சபாநாயகர் அப்பாவு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:17:31 PM (IST)

தவெக - காங்கிரஸ் கூட்டணி? விஜய் உடன் ராகுலின் முக்கிய ஆலோசகர் திடீர் சந்திப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 3:50:57 PM (IST)

தமிழ்நாட்டில் தலைமைக்காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை : அன்புமணி குற்றச்சாட்டு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:31:37 PM (IST)










