» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் ஒட்டும் பணி : ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு!!
வெள்ளி 12, ஏப்ரல் 2024 12:02:44 PM (IST)
குமரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய பேலட் பேப்பர் ஒட்டும் பணிகளை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச் சாவடிகளுக்கு கணிணி மூலம் கலக்கல் முறையில் ஓதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்கு சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய பேலட் பேப்பர் ஒட்டும் பணியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தின் படி கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றம் சின்னம் அடங்கிய பேலட் பேப்பல் ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆறு சட்டமன்ற தொகுதி வாரியாக கன்னியாகுமரி பாராளமன்ற பொதுத்தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய பேலட் பேட்பர் ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 310 வாக்குச் சாவடிகளுக்கு தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்திலும், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 275 வாக்குச் சாவடிகளுக்கு அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 300 வாக்குச் சாவடிகளுக்கு கல்குளம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 273 வாக்குச் சாவடிகளுக்கு திருவட்டார் வட்டாட்சியர் அலுவலகத்திலும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்களுக்கான வாக்குச் சாவடிகளுக்கு மேல்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், பாராளுமன்ற தேர்தலுக்கு 272 வாக்குச் சாவடிகளுக்கு விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்திலும், 234 கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 268 வாக்குச் சாவடிகளுக்கு கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், கணினி மூலம் கலக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்கு சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய பேலட் பேப்பர் ஒட்டும் பணிகள் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று 11.04.2024 அன்று நிறைவுபெற்றுள்ளது.
அதன் ஒரு பகுதியாக 232 பத்மநாபபுரம் சட்டமன்றத்திற்குட்பட்ட வாக்குச் சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்கு சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய பேலட் பேப்பர் ஒட்டும் பணிகள் 234 கிள்ளியூர் சட்டமன்றத்திற்குட்பட்ட வாக்குச் சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்கு சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய பேலட் பேப்பர் ஒட்டும் பணிகள் கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், தெரிவித்தார்கள்.
நடைபெற்ற ஆய்வுகளில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ரஜத் பீட்டன், கூடுதல் தேர்தல் கண்காணிப்பாளர் லொரைட்டா, வட்டாட்சியர்கள் புரந்தர தாஸ் (திருவட்டார்), ராஜசேகர் (கிள்ளியூர்), அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.