» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்த சரத்குமார் : அண்ணாமலை வரவேற்பு!

செவ்வாய் 12, மார்ச் 2024 3:47:02 PM (IST)



பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் சரத்குமார் இன்று இணைத்தார். 

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் என்று முன்னதாக சரத்குமார் தெரிவித்திருந்தார்.

பாஜகவுடன் சமக கட்சி தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் சரத்குமார் இன்று இணைத்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் சரத்குமார் இணைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய தமிழக பாஜகத் தலைவர் அண்ணாமலை, "தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்திருக்கும் நேரத்தில், சரத்குமார் எடுத்துள்ள முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவாகும். சரத்குமாரை தமிழகத்தில் அடைத்துவைக்க பாஜக விரும்பவில்லை, அவர் தேசியத்திற்கு தேவைப்படுவதாக தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory