» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

லாரி மீது உரசிய பேருந்து: படிக்கட்டில் பயணம் செய்த 4 கல்லூரி மாணவர்கள் பரிதாப சாவு!

செவ்வாய் 12, மார்ச் 2024 11:06:52 AM (IST)

மதுராந்தகம் அருகே தனியார் பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்த 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே  திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரியின் பக்கவாட்டில் பேருந்து உரசியதில், படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் தவறி விழுந்தனர். தவறி விழுந்த 3 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த மாணவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory