» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
லாரி மீது உரசிய பேருந்து: படிக்கட்டில் பயணம் செய்த 4 கல்லூரி மாணவர்கள் பரிதாப சாவு!
செவ்வாய் 12, மார்ச் 2024 11:06:52 AM (IST)
மதுராந்தகம் அருகே தனியார் பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்த 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரியின் பக்கவாட்டில் பேருந்து உரசியதில், படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் தவறி விழுந்தனர். தவறி விழுந்த 3 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த மாணவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.