» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கடன் தொல்லையால் தாய் - மகன் தற்கொலை : இரணியல் அருகே பரிதாபம்!!!

திங்கள் 11, மார்ச் 2024 4:15:05 PM (IST)

இரணியல் அருகே கடன் தொல்லையால் தாய் - மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். 

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சடவிளை தெருவை சேர்ந்தவர் விலாசினி (65). இவரது மகன் பிஜூ பிரதீப் (35). இவர் ஊதுபத்தி சாம்பிராணி வாசனை திரவியங்கள் தயார் செய்து மொத்த விற்பனை செய்து வந்தார். திருமணமாகவில்லை. இவருக்கு புதிய வாகனம் வாங்கிய வகையில் கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

நேற்று இரவு மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள உறவினருக்கு போன் மூலம் நானும் அம்மாவும் விஷம் குடித்து விட்டு சாகப் போவதாக கூறி உள்ளார். இதனை அடுத்து அவர் பிஜூவின் நண்பர்களுக்கு தகவல் கூறினார். வீட்டில் வந்து பார்த்த போது இருவரும் வாயில் நுரை பொங்க உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

இருவரையும் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory