» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாநில எழுத்து, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சாம்பியன்
செவ்வாய் 31, ஜனவரி 2023 12:12:55 PM (IST)
சேலம் டேலன்டினா கல்வி அறக்கட்டளை மாநில அளவில் நடத்திய எழுத்து, கட்டுரை, ரங்கோலி, ஓவியப் போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது.
சேலம் லேன்டினா கல்வி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாநில அளவிலான தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் எழுத்துப் பயிற்சி, கட்டுரைப் போட்டி, ரங்கோலி, ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இப்பள்ளி மாணவி சௌந்தர்ய லெட்சுமி தமிழ் எழுத்துப் பயிற்சியிலும், மாணவர்கள் குருசரன், லெனிட்டா புஷ்பா, ஹரிணி ஆகியோர் ஆங்கில எழுத்துப் பயிற்சியிலும், மாணவி அமிர்தவர்ஷினி ஹிந்தி எழுத்துப் பயிற்சியிலும் முதலிடம் பெற்றனர். மேலும் இப்பள்ளி மாணவி ஹர்சிகா கட்டுரைப் போட்டியில் முதலிடமும், மாணவி அகல்யா ரங்கோலி போட்டியில் முதலிடமும், மாணவர்கள் தன்விக், ஜெர்ஷன் சாமுவேல், மாணவி காவியா ஆகியோர் ஓவியப் போட்டியில் முதலிடமும் பெற்றனர். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளிக்கு வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காரைக்குடி அரசு சட்டக்கல்லூரி முதல்வர் டாக்டர் ராமபிரான் ரஞ்சித் சிங் பரிசு, பதக்கம், சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை, இயக்குநரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால் சுசி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.